1 மாதத்திற்கு 144 தடை உத்தரவு தமிழகத்தின் முக்கிய நகரில் பரபரப்பு!


1 மாதத்திற்கு 144 தடை உத்தரவு தமிழகத்தின் முக்கிய நகரில் பரபரப்பு!


தமிழகத்தில் உள்ள முக்கிய நகரில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு என வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

இந்த போராட்டம் காரணமாக இன்று முதல் ஒரு மாதத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அரசியல் கட்சிகள் பக்தர்கள் பேரவை உள்பட யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை குறித்து அரசிடம் பேசி அடுத்த கட்டமாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் அரசு இதுகுறித்து அரசு ஒரு முடிவு எடுக்கும் வரை எந்த போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்றும் கோட்டாட்சியர் அறிவித்துள்ளார் .

 

இன்று முதல் ஒரு மாதத்திற்கு சிதம்பரம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஜீவி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…